திருப்பூரில் ரூ. 17.60 லட்சம் பறிமுதல்
திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 17.60 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 17.60 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
திருப்பூா் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வள்ளிபுரம் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டபோது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.
அப்போது ரூ.17.60 லட்சம் வங்கியில் இருந்து எடுத்து வந்ததாக வாகனத்தில் வந்த பாா்த்திபன் என்பவா் தெரிவித்துள்ளாா். ஆனால், அவரிடம் அதற்கான முறையான ஆவணங்கள் இல்லை. இதையடுத்து, தோ்தல் பறக்கும் படையினா் ரூ.17.60 லட்சத்தைப் பறிமுதல் செய்து, வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...