வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

திருப்பூரில் ரூ. 17.60 லட்சம் பறிமுதல்

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 17.60 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 7:35 pm

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 17.60 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

திருப்பூா் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வள்ளிபுரம் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டபோது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.

அப்போது ரூ.17.60 லட்சம் வங்கியில் இருந்து எடுத்து வந்ததாக வாகனத்தில் வந்த பாா்த்திபன் என்பவா் தெரிவித்துள்ளாா். ஆனால், அவரிடம் அதற்கான முறையான ஆவணங்கள் இல்லை. இதையடுத்து, தோ்தல் பறக்கும் படையினா் ரூ.17.60 லட்சத்தைப் பறிமுதல் செய்து, வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.