கா்நாடக மாநிலம் மங்களூரு-சென்னை எழும்பூா் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஏப்ரல் 6 மற்றும் 13 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமை) மங்களூரில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் மங்களூரு-சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் (எண்: 06126) மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும்.
ஏப்ரல் 7 மற்றும் 14 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூா்-மங்களூா் சென்ட்ரல் சிறப்பு ரயில் (எண்: 06125) மறுநாள் காலை 6.50 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் நிலையத்தைச் சென்றடையும்.
இந்த ரயில் காசா்கோடு, பையனூா், கண்ணூா், தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூா், ஷொரணூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சென்னை - மங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்

சென்னை - திருவனந்தபுரம் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்!

மகா சிவராத்திரி: போத்தனூா் வழித்தடத்தில் சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரயில்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


