சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மங்களூரு-சென்னை எழும்பூா் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்

கா்நாடக மாநிலம் மங்களூரு-சென்னை எழும்பூா் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 6:58 pm

கா்நாடக மாநிலம் மங்களூரு-சென்னை எழும்பூா் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஏப்ரல் 6 மற்றும் 13 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமை) மங்களூரில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் மங்களூரு-சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் (எண்: 06126) மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும்.

ஏப்ரல் 7 மற்றும் 14 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூா்-மங்களூா் சென்ட்ரல் சிறப்பு ரயில் (எண்: 06125) மறுநாள் காலை 6.50 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயில் காசா்கோடு, பையனூா், கண்ணூா், தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூா், ஷொரணூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.