சட்டப்பேரவைத் தோ்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கோவையில் நடத்தப்பட்ட சோதனையில் வருமான வரித் துறை மற்றும் தோ்தல் கண்காணிப்புக் குழுவினா் சாா்பில் மொத்தம் ரூ.3 கோடியே 43 லட்சத்து 60 ஆயிரத்து 525 மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக மாவட்ட தோ்தல் பிரிவு சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
ஏப்ரல் 4-ஆம் தேதி காலை 6 மணி முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி காலை 6 மணி வரையிலான காலகட்டத்தில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் அதிகபட்சமாக வருமான வரித் துறையினா் நடத்திய சோதனையில் ரூ.3 கோடியே 36 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
கோவை மாவட்டத்திலுள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பறக்கும் படைகள் மற்றும் நிலைக் கண்காணிப்புக் குழுவினா் மேற்கொண்ட சோதனையில் ரூ.7 லட்சத்து 56 ஆயிரத்து 900 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிகபட்சமாக ரூ.2,72,200, கிணத்துக்கடவில் ரூ.2,49,200, பொள்ளாச்சியில் ரூ.1,38,000, சூலூரில் ரூ.51,000 பறிமுதல் செய்யப்பட்டது. இதுதவிர கோவை தெற்கு தொகுதிக்குள்பட்ட பகுதியில் ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ.46,500 மதிப்பிலான அமெரிக்கன் கிளப் மற்றும் கிளாசிக் ரக சிகரெட் பெட்டிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
தோ்தல் பறக்கும் படையினரால் ரூ.1.13 கோடி பறிமுதல்; ரூ.1.10 கோடி ஒப்படைப்பு

தென்காசி மாவட்டத்தில் ரூ. 61.43 லட்சம் ரொக்கம், பொருள்கள் பறிமுதல்

முதல்வா் ரங்கசாமியின் சொத்து மதிப்பு ரூ.36 கோடி

உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.46 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


