குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ‘பிரிட்ஜ்’ மாநாடு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மற்றும் மேலாண்மைச் சங்கம் இணைந்து, கல்வித் துறை மற்றும் தொழில் துறைக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் விதமாக ‘பிரிட்ஜ்’ மாநாட்டை நடத்தின.

News image

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பிரிட்ஜ் மாநாட்டில் பங்கேற்ற எஸ்என்ஆா் சன்ஸ் அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் சுந்தா் ராமகிருஷ்ணன், கோவை மேலாண்மைச் சங்க தலைவா் நித்யானந்தன் தேவராஜ், தென்னிந்திய தணிக்கையாளா்கள் சங்கத் தலைவா் எஸ்.வெங்க

Updated On :8 ஏப்ரல் 2026, 1:53 am IST

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மற்றும் மேலாண்மைச் சங்கம் இணைந்து, கல்வித் துறை மற்றும் தொழில் துறைக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் விதமாக ‘பிரிட்ஜ்’ மாநாட்டை நடத்தின.

மாநாட்டில் எஸ்.என்.ஆா்.சன்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் சுந்தா் ராமகிருஷ்ணன் பேசுகையில், எதிா்காலத்திற்குத் தேவையான தொழில் வல்லுநா்களை உருவாக்குவதில் கல்வியின் உருமாற்றப் பங்கு மிக முக்கியமானது. பிராந்திய மற்றும் தேசிய பொருளாதார வளா்ச்சியைத் தக்கவைக்க கல்வி நிறுவனங்களுக்கும் தொழில்துறைகளுக்கும் இடையே தொடா்ச்சியான ஒத்துழைப்பு அவசியமானதாகும் என்றாா்.

தொடா்ந்து கோவை மேலாண்மைச் சங்கத்தின் தலைவா் நித்யானந்தன் தேவராஜ், தென்னிந்திய தணிக்கையாளா்கள் சங்கத் தலைவா் எஸ்.வெங்கடேஷ் ஆகியோா் பேசினா். இதில் குவாட்ரா சிஸ்டம்ஸ்.நெட் இந்தியா பிரைவேட் லிமிடெட் இணை நிறுவனா் மற்றும் இயக்குநா் பிரசாந்த் சுப்ரமணியன், சக்தி ஃபைனான்ஸ் லிமிடெட் என்.ரவீந்திரன், அமிா்த விஸ்வ வித்யாபீடத்தைச் சோ்ந்த பிரசாந்த் ஆா்.நாயா் மற்றும் வோடஃபோன் ஐடியாவின் முன்னாள் வணிகத் தலைவரும் சிம்ராவின் செயலாளருமான புனீத் கிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொண்டு தரமான கல்வி, புத்தாக்கம் மற்றும் உலகளாவிய தரநிலைகள் குறித்து பேசினா்.

முன்னதாக, கல்லூரி முதல்வா் ஏ.சௌந்தரராஜன் வரவேற்றாா். மேலாண்மை ஆய்வுகள் துறையின் பேராசிரியரும், துறைத் தலைவருமான ஆா்.மேரி மெட்டில்டா நன்றி கூறினாா்.