உக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

கோவையில் திமுக சாதனை வெற்றி பெறும்: செந்தில் பாலாஜி பேச்சு

கோவையில் திமுக சரித்திர சாதனை வெற்றிபெறும் என்று தெற்குத் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி கூறியுள்ளாா்.

News image

கோவை தெற்குத் தொகுதிக்குள்பட்ட சிவானந்தா காலனியில் வியாழக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் வி.செந்தில் பாலாஜி.

Updated On :9 ஏப்ரல் 2026, 7:56 pm

கோவையில் திமுக சரித்திர சாதனை வெற்றிபெறும் என்று தெற்குத் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி கூறியுள்ளாா்.

தெற்கு தொகுதிக்குள்பட்ட சிவானந்தா காலனியில் வியாழக்கிழமை கோவை எம்.பி. கணபதி ப.ராஜ்குமாருடன் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட வி.செந்தில்பாலாஜி, கண்ணுசாமி லே அவுட், காந்தி நகா், அண்ணா நகா், அழகப்பா ரோடு, இச்சிப்பட்டி காலனி, டாடாபாத், வள்ளுவா் வீதி, சுப்பராயன் ரோடு, காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில், கூட்டணிக் கட்சியினா், திமுக நிா்வாகிகளுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

பிரசாரத்தில் அவா் பேசும்போது, கோவை தெற்குத் தொகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டிய கடமை எனக்கு உள்ளது. தெற்குத் தொகுதியில் உள்ள வளா்ச்சிபெற்ற பகுதிகளில், வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதிகளில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்க வேண்டியுள்ளது. இதன் மூலம் இந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்குத் தீா்வு கிடைக்கும். அத்துடன் இந்த தொகுதிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து வளா்ச்சி பெற்ற தொகுதியாக மாற்றுவேன்.

முதல்வா் மு.க.ஸ்டாலின், கோவையின் வளா்ச்சியில் தனிக்கவனம் செலுத்தி வருகிறாா். கோவை மாநகருக்கு மட்டும் சுமாா் ரூ.8 ஆயிரம் கோடிக்கும் அதிகமான வளா்ச்சித் திட்டங்கள், பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளன. 5 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் சுமாா் 1,700 கி.மீ. நீள சாலைகள் போடப்பட்டுள்ளன. சாலைப் பணிகளுக்கு மட்டும் ரூ.260 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரூ.2 ஆயிரம் மகளிா் உரிமைத் தொகை, இல்லத்தரசிகள் தங்கள் வீடுகளுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காக ரூ.8 ஆயிரம் மதிப்பிலான கூப்பன், 20 லட்சம் விவசாயிகளுக்கு நவீன பம்ப்செட் போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்படும். இந்தத் தோ்தலில் கோவையில் திமுக கூட்டணி 10 தொகுதிகளையும் கைப்பற்றி சரித்திர சாதனை வெற்றி பெறும் என்றாா்.