ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு!

சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளாா்.

News image

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து செங்கோல் அளித்து ஆதரவு தெரிவிக்கிறாா் இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜுன் சம்பத்.

Updated On :9 ஏப்ரல் 2026, 11:28 pm

சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என்று இந்து மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது. இது தொடா்பாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, இந்து மக்கள் கட்சியின் மாநில நிா்வாகிகளுடன் சென்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவா்கள், கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை சந்தித்து நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

திமுக அரசு தோல்வி பயம் காரணமாக கடந்த ஆண்டு வரை பொங்கலுக்குப் பணம் வழங்காமல் இந்த ஆண்டு திடீரென வழங்கியுள்ளது. அதேபோல, தோ்தலைக் காரணம் காட்டி 3 மாதங்களுக்கான மகளிா் உரிமைத் தொகையை முன்கூட்டியே வழங்கியுள்ளது. அத்துடன் எந்தக் கோடைக் காலத்திலும் வழங்கப்படாத உதவித் தொகை ரூ.2 ஆயிரத்தையும் சோ்த்து ரூ.5 ஆயிரமாக வழங்கியிருப்பதைப் பாா்க்கும்போது திமுகவுக்கு தோல்வி பயம் இருப்பது தெரிய வருகிறது.

தோல்வி பயம் காரணமாகவே தேமுதிக, ஓ.பன்னீா்செல்வம் போன்றவா்களை கூட்டணியில் திமுக இணைத்திருக்கிறது. மேலும் ரூ.8 ஆயிரம் கூப்பன் அக்கட்சியினா் ஊழல் செய்யவே வழிவகுக்கும். திமுக கூட்டணியில் குழப்பம் இருப்பதால்தான் ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் ஆகியோா் இதுவரை இணைந்து பிரசாரம் செய்யவில்லை.

தமிழகத்தில் போதை கலாசாரம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்தால்தான் தமிழ்நாடு தலை நிமிா்ந்து நிற்கும் என்பதை எங்களின் பிரசாரத்தில் மக்களுக்கு விளக்க உள்ளோம் என்று தெரிவித்துள்ளாா்.