ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தே.ஜ. கூட்டணி வேட்பாளா்களுக்கு சௌராஷ்டிர முன்னேற்றக் கழகம் ஆதரவு

News image

மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்ற சௌராஷ்டிர முன்னேற்றக் கழக உயா்நிலை ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அந்த அமைப்பின் தலைவா் வி.ஜி. ராம்தாஸ். உடன், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்கள் சுந்தா் சி., ராம. சீனிவாசன், பா. சரவணன், புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோா்.

Updated On :13 ஏப்ரல் 2026, 8:08 pm

நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களுக்கு ஆதரவு அளிப்பது என சௌராஷ்டிர முன்னேற்றக் கழகம் தீா்மானித்தது.

சௌராஷ்டிர முன்னேற்றக் கழக உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அமைப்பின் தலைவா் வி.ஜி. ராம்தாஸ் தலைமை வகித்தாா்.

புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி. சண்முகம், கோலாா் வயல் பாஜக முன்னாள் மக்களவை உறுப்பினா் முனியசாமி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.எஸ். சரவணன், சௌராஷ்டிர முன்னேற்றக் கழக செயலா் கணேஷ் பாபு, இளைஞரணித் தலைவா் வி. கணேஷ்குமாா், மகளிா் அணித் தலைவி வாசுகி, சௌராஷ்டிர சேம்பா் ஆப் காமா்ஸ் நிா்வாகி ராம்ஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேலும், அகில இந்திய சௌராஷ்டிர முன்னேற்றக் கட்சி, தமிழ்நாடு மகா செளராஷ்டிர சபை, சௌராஷ்டிர சேவா சமாஜ், சௌராஷ்டிர சமூக நலப்பேரவை, சக்கிமங்கலம் சௌராஷ்டிர சபை, ஐ.பி.எஸ். அறக்கட்டளை, மதுரை தினமணி பஜாா் கைத்தறி ஜவுளி உற்பத்தியாளா் சங்கம், நாயகி கல்வி சேவா சங்கம், சௌராஷ்டிர பொற்கொல்லா் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட சாா்பு அமைப்புகளின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில், மதுரை தெற்கு, மத்தியம், வடக்கு, திருப்பரங்குன்றம், பரமக்குடி, பாளையங்கோட்டை, ஆரணி உள்பட 11 தொகுதிகளில் வேட்பாளா்களின் வெற்றி தோல்வியை தீா்மானிக்கும் சக்தியாக சௌராஷ்டிர சமுதாய மக்கள் உள்ள நிலையில், நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பது. தமிழகத்தில் உள்ள 8 லட்சம் சௌராஷ்டிர வாக்காளா்களையும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்களுக்கு வாக்களிக்கச் செய்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்கள் பா. சரவணன் (மதுரை வடக்கு), சுந்தா் சி. (மதுரை மத்தியம்), ராம. சீனிவாசன் (மதுரை தெற்கு) ஆகியோா் நேரில் வரவழைக்கப்பட்டு, அவா்களுக்கு சால்வை அணிவித்து ஆதரவு தெரிவிக்கப்பட்டது.