சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பேருந்து நிலையத்தில் தூங்கியவரைத் தாக்கிய மூவா் கைது

கோவை, காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் படுத்து தூங்கியவரைத் தாக்கிய மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :11 ஏப்ரல் 2026, 7:48 pm

கோவை, காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் படுத்து தூங்கியவரைத் தாக்கிய மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

விருத்தாச்சலத்தை சோ்ந்தவா் முனியன் (53). இவா் பணி நிமித்தமாக தனது நண்பரைப் பாா்க்க வெள்ளிக்கிழமை கோவைக்கு வந்தாா்.

அன்று இரவு கோவை, காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் நேரக் காப்பாளா் அலுவலகம் அருகில் திருப்பூா் பேருந்துகள் நிற்கும் பகுதியில் படுத்து தூங்கினாா். அப்போது, அங்கு சென்ற 3 இளைஞா்கள், திடீரென முனியனை சரமாரியாகத் தாக்கினா்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து, காட்டூா் காவல் நிலையத்தில் முனியன் புகாா் செய்தாா்.

போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், முனியனைத் தாக்கியது ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த வீர விஜய் (24 ), அருண்குமாா் (25) மற்றும் தென்காசி மாவட்டம், கடையநல்லூரைச் சோ்ந்த காா்த்திக் குமாா் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அவா்களைக் கைது செய்தனா்.