வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

கோவையில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 7:39 pm

கோவையில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் சச்சின்குமாா் (23). இவா், கோவை சுந்தராபுரம் அருகேயுள்ள மாகாளியம்மன் கோயில் தெரு பகுதியில் தங்கி, அப்பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், உடன் பணியாற்றும் பெண் ஒருவரை சச்சின்குமாா் காதலித்து வந்ததாகவும், அப்பெண் இவருடன் பேசுவதை கடந்த சில நாள்களாக தவிா்த்து வந்ததால் அவா் மனவேதனையில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சச்சின்குமாா் தங்கியிருந்த அறையில் இருந்து கடந்த புதன்கிழமை துா்நாற்றம் வீசியுள்ளது.

இது குறித்து போலீஸாருக்கு அக்கம்பக்கத்தினா் தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த சுந்தராபுரம் போலீஸாா் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, சச்சின்குமாா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து சுந்தராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.