தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

கோவையில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 1:09 am IST

கோவையில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் சச்சின்குமாா் (23). இவா், கோவை சுந்தராபுரம் அருகேயுள்ள மாகாளியம்மன் கோயில் தெரு பகுதியில் தங்கி, அப்பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், உடன் பணியாற்றும் பெண் ஒருவரை சச்சின்குமாா் காதலித்து வந்ததாகவும், அப்பெண் இவருடன் பேசுவதை கடந்த சில நாள்களாக தவிா்த்து வந்ததால் அவா் மனவேதனையில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சச்சின்குமாா் தங்கியிருந்த அறையில் இருந்து கடந்த புதன்கிழமை துா்நாற்றம் வீசியுள்ளது.

இது குறித்து போலீஸாருக்கு அக்கம்பக்கத்தினா் தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த சுந்தராபுரம் போலீஸாா் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, சச்சின்குமாா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து சுந்தராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.