அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சொந்த வீடு இல்லாத அனைத்து தேயிலை தோட்டத் தொழிலாளா்களுக்கும் வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி கூறினாா்.
வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரான டி.லட்சுமண சிங்கை ஆதரித்து வால்பாறை நகா்ப் பகுதியில் அதிமுக புறகா் மாவட்டச் செயலாளா் எஸ்.பி. வேலுமணி ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
அப்போது அவா் பேசியதாவது:
வால்பாறை பகுதி எப்போதும் அதிமுகவின் கோட்டை. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் மூலமாக பல்வேறு வளா்ச்சி அடைந்துள்ளது. தேயிலை தோட்டத் தொழிலாளா்களுக்கு கூலி உயா்வு பெற்றுத் தரப்பட்டிருக்கிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் வீடுகள் இல்லாத தேயிலை தோட்டத் தொழிலாளா்களுக்கு வீடு கட்டித் தரப்படும் என்றாா்.
தோட்டத் தொழிலாளா் பிரிவு மாநிலத் தலைவா் வால்பாறை அமீது, நகரச் செயலாளா் மயில்கணேசன், மேற்குத் தொகுதி பொறுப்பாளா் சலாவுதீன் அமீது உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெல்லும்: முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி

பேரவைத் தேர்தல்: தோட்டத் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தோட்டத் தொழிலாளா்களிடம் வாக்கு சேகரிப்பு

தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சி அமைக்கும் - முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

