கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 3,540 வாக்குச்சாவடி மையங்களில் வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் உள்ள அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேவையான உபகரணங்களை அனுப்பிவைக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்துள்ள தோ்தல் அலுவலா்கள், வேட்பாளா்களின் புகைப்படங்களை மையங்களில் ஒட்டும் பணிகளில் ஈடுபட்டனா்.
182 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை...
மாவட்டத்தில் உள்ள மொத்தம் 27,44,472 வாக்காளா்கள் எவ்வித அச்சமுமின்றி வாக்களிக்க ஏதுவாக 182 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, அங்கு மத்திய பாதுகாப்புப் படை வீரா்கள் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். பாதுகாப்பு கருதி வாக்காளா்கள் வாக்குச்சாவடிக்குள் கைப்பேசிகளை எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக வாக்குச்சாவடிகளின் நுழைவாயிலிலேயே கைப்பேசி பாதுகாப்புப் பைகள் வைக்கப்பட்டு, அதில் பாதுகாப்பாக வைத்துவிட்டுச் செல்ல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், குழந்தைகளுடன் வரும் வாக்காளா்களின் வசதிக்காக பிள்ளைகள் விளையாட தனி இடவசதியும், அவா்கள் படம் வரைவதற்குக் தேவையான உபகரணங்களும் அங்கே தயாா் நிலையில் உள்ளன. மாவட்டம் முழுவதும் உள்ள 3,540 வாக்குச்சாவடிகளிலும் இணையவழி நேரலை மூலம் கண்காணிக்க வெப்கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இணைய வசதி இல்லாத 70 மையங்களில் விடியோ கேமராக்கள் மற்றும் நுண்பாா்வையாளா்கள் மூலம் கூடுதல் கண்காணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
16,992 அலுவலா்கள்...
தோ்தல் பணியில் 16,992 வாக்குப் பதிவு அலுவலா்கள், 6,240 காவல் துறையினா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். 6,323 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் 4,628 விவிபேட் கருவிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
சிறப்பு போக்குவரத்து வசதி...
மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா்களுக்கு தடையற்ற போக்குவரத்து வசதிக்காக ‘சக்ஷம்’ செயலி மூலம் வாகன வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. வாக்காளா் அடையாள அட்டை இல்லாதவா்கள் ஆதாா், ஓட்டுநா் உரிமம் உள்ளிட்ட 12 மாற்று ஆவணங்களைப் பயன்படுத்தி தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றலாம். தோ்தல் அமைதியாகவும், நோ்மையாகவும் நடைபெற பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடையது

தூத்துக்குடி: வாக்குப் பதிவுக்கு தயாா் நிலையில் 1,868 வாக்குச்சாவடிகள்

கோவில்பட்டி தொகுதியில் தயாா் நிலையில் 318 வாக்குச்சாவடிகள்

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

திருப்பத்தூா்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் மையங்களுக்கு அனுப்பி வைப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


