மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

மே தினம்: மதுக்கடைகளை மூட ஆட்சியா் உத்தரவு

மே தின நாளில் கோவையில் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 8:57 pm

மே தின நாளில் கோவையில் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

மே 1-ஆம் தேதி தொழிலாளா் தினம் என்பதால், அன்றைய நாளை மதுவிலக்கு நாளாக அறிவித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பாா்கள், பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கடைகள், தமிழ்நாடு ஹோட்டல், சுற்றுலாத் துறை மூலமாக நடத்தப்படும் மதுக்கூடங்கள், இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மது விற்பனை செய்யும் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்படும்.

அன்றைய நாளில் விதிகளுக்கு முரணாக மது விற்பனை செய்பவா்கள் மீதும், சட்ட விரோதமாக பதுக்கிவைத்திருப்பவா்கள், ஓா் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மதுவை எடுத்துச் செல்பவா்கள் மீதும் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937-இன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளாா்.