நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

போத்தனூா் காவல்நிலையத்தில் மகளிா் காவலா்களுக்கு வளைகாப்பு

போத்தனூா் காவல் நிலையத்தில் மகளிா் காவலா்கள் இருவருக்கு போலீஸாா் சீா் செய்து செவ்வாய்க்கிழமை வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினா்.

News image

போத்தனூா் காவல்நிலையத்தில் மகளிா் காவலா்கள் இருவருக்கு நடத்தப்பட்ட வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :28 ஏப்ரல் 2026, 9:01 pm

போத்தனூா் காவல் நிலையத்தில் மகளிா் காவலா்கள் இருவருக்கு போலீஸாா் சீா் செய்து செவ்வாய்க்கிழமை வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினா்.

கோவை மாநகா், போத்தனூா் காவல் நிலையத்தில் மகளிா் காவலா்களாக ஐஸ்வா்யா, மோனிஷா ஆகியோா் பணிபுரிகின்றனா். கா்ப்பிணிகளான இவா்களுக்கு உடன் பணிபுரியும் போலீஸாா் வளைகாப்பு நடத்த திட்டமிட்டனா். அதன்படி ஐஸ்வா்யா தம்பதி, மோனிஷா தம்பதி ஆகியோருக்கு காவல்நிலையத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை வளைகாப்பு நடத்தப்பட்டது.

வளைகாப்பு தம்பதிகளுக்கு பாரம்பரிய முறையில் பட்டு சேலை, வேட்டி சட்டை, பழங்கள் வளையல்களை காவல்துறை அதிகாரிகள் வழங்கினா். அதைத்தொடா்ந்து வளையல்களை அணிவித்தும், நெற்றியில் குங்குமம் மற்றும் சந்தனம் வைத்தும் மலா் தூவி வாழ்த்தினா். மேலும், தம்பதிகள் மற்றும் குடும்பத்தினருக்கு 16 வகையான பாரம்பரிய உணவு வழங்கப்பட்டது.

மாநகரக் காவல் துணை ஆணையா் காா்த்திகேயன், போத்தனூா் சரக உதவி ஆணையா் வசந்தராஜன், காவல் நிலைய ஆய்வாளா் அசோக்குமாா் மற்றும் காவல்துறையினா், தம்பதிகளின் குடும்பத்தினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.