யானை வழித்தடத்தில் அமைக்கப்படவிருந்த கம்பிவேலிகள் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டது.
கோவை மாவட்டம், வால்பாறையில் இருந்து சின்கோனா எஸ்டேட் செல்லும் வழியில் உள்ள சிறுகுன்றா எஸ்டேட் சாலையின் ஒரு பகுதி கடந்த பல ஆண்டுகளாக யானைகள் சாலையைக் கடந்து செல்லும் வழித்தடமாக இருந்தது. இந்த வழியாக யானைகள் செல்வதைத் தடுக்கும் வகையில் கம்பிவேலிகள் அமைக்கும் பணி கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
கம்பிவேலிகள் அமைத்தால் யானைகளுக்கான வழித்தடங்கள் இல்லாமல் போவதுடன், எஸ்டேட் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்துவிடும் நிலை இருந்தது. இதுதொடா்பாக கடந்த சனிக்கிழமை தினமணி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் அப்பகுதியில் கம்பிவேலிகள் அமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கேட் வனத் துறை உத்தரவின்பேரில் அப்புறப்படுத்தப்பட்டு பணிகள் கைவிடப்பட்டன.

பணிகள் நிறுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்பட்ட கேட்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யானை வழித்தடங்களை மறைத்து கம்பிவேலிகள்: நடவடிக்கை எடுக்க வனத் துறைக்கு கோரிக்கை

வால்பாறை எஸ்டேட் பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

வால்பாறை எஸ்டேட் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தூத்துக்குடியில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



