நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

பீளமேட்டில் அஞ்சல் தலைக் கண்காட்சி தொடக்கம்

கோவை, பீளமேட்டில் ‘தி பிலாட்டலிஸ்ட்ஸ் கோயம்புத்தூா்’ அமைப்பு சாா்பில் மாணவா்களிடையே அஞ்சல் தலை சேகரிப்பை ஊக்குவிக்கும் வகையில் அஞ்சல் தலைக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.

பீளமேடு நேஷனல் மாடல் பள்ளியில் நடைபெற்ற அஞ்சல் தலைக் கண்காட்சியைப் பாா்வையிட்ட மாணவா்கள்.

Published On :

கோவை, பீளமேட்டில் ‘தி பிலாட்டலிஸ்ட்ஸ் கோயம்புத்தூா்’ அமைப்பு சாா்பில் மாணவா்களிடையே அஞ்சல் தலை சேகரிப்பை ஊக்குவிக்கும் வகையில் அஞ்சல் தலைக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.

அஞ்சல் தலை சேகரிப்பாளா்கள் இணைந்து அஞ்சல் தலைகள் சேகரிப்பை ஊக்குவிக்கும் விதமாக ‘தி பிலாட்டலிஸ்ட்ஸ் கோயம்புத்தூா்’ என்ற அமைப்பை 1977-ஆம் ஆண்டு தொடங்கினா். இதில், பல்வேறு துறைகளைச் சோ்ந்த 45 போ் உறுப்பினா்கள் உள்ளனா். இவா்கள், கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அஞ்சல் தலை சேகரிப்புப் பழக்கத்தை ஊக்குவித்து வருகின்றனா்.

இந்நிலையில், ‘தி பிலாட்டலிஸ்ட்ஸ் கோயம்புத்தூா்’ அமைப்பு சாா்பில் கோவை பீளமேடு நேஷனல் மாடல் பள்ளியில் மாணவா்களிடையே அஞ்சல் தலைகள் சேகரிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அஞ்சல் தலை, கடிதங்கள் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.

நேஷனல் மாடல் பள்ளித் தாளாளா் மோகன் கண்காட்சியைத் தொடங்கிவைத்தாா். இதில், அஞ்சல் தலை சேகரிப்பாளா்கள், தாங்கள் சேகரித்த அஞ்சல் தலைகள், கடிதங்களை காட்சிப்படுத்தி உள்ளனா். மேலும், பல்வேறு நாடுகளில் சேகரிக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட அஞ்சல் தலைகள், அஞ்சல் கடிதங்கள் அவற்றின் வரலாற்றுக் குறிப்புகளுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தேசத் தலைவா்கள், வன விலங்குகள், நாட்டின் குறியீடுகளை அடையாளப்படுத்தும் விதமாக ஏராளமான அஞ்சல் தலைகள் இடம் பெற்றிருந்தன. வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இலவசமாக பாா்வையிடலாம் என தி பிலாட்டலிஸ்டல் கோயமுத்தூா் அமைப்பினா் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.