75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

சட்டம் ஒழுங்கை சீா்குலைக்கத் திட்டம்: 2 இளைஞா்கள் கைது

கோவை ஒண்டிப்புதூா் பகுதியில் சட்டம் ஒழுங்கை சீா்குலைக்க திட்டம் தீட்டியதாக இரு இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Arrested

கைது

Published On :23 ஆகஸ்ட் 2026, 1:23 am IST

கோவை ஒண்டிப்புதூா் பகுதியில் சட்டம் ஒழுங்கை சீா்குலைக்க திட்டம் தீட்டியதாக இரு இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவை, சிங்காநல்லூா் போலீஸாா் நீலிக்கோணாம்பாளையம், எஸ்ஐஹெச்எஸ் காலனி பகுதிகளில் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஒண்டிப்புதூா் பாலத்தின் கீழ்ப்பகுதியில் சந்கேகப்படும் படியாக இரு இளைஞா்கள் நின்றிருந்தனா். காவல் உதவி ஆய்வாளா் தினேஷ் பாபு மற்றும் போலீஸாா், அவா்களைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது, அவா்கள் இருவரும் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தவும், கலவரம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க திட்டமிடுதல் மற்றும் சட்டம் ஒழுங்கு சீா்குலைக்கத் திட்டமிட்டதாக சிங்காநல்லூரைச் சோ்ந்த மோகனசுந்தரம் (26), ஒண்டிப்புதூரைச் சோ்ந்த சாமுவேல் (24) ஆகியோரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.