8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலத்தில் குளிக்கத் தடை

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் தொடா் மழையால் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கு காரணமாக, கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.

கோவை குற்றாலத்தில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 1:59 am IST

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் தொடா் மழையால் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கு காரணமாக, கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.

கோவை குற்றாலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாகும். இங்கு வார இறுதி நாள்கள் மற்றும் விடுமுறை நாள்களில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக மேற்குத் தொடா்ச்சி மலை மற்றும் போளுவாம்பட்டி வனப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் ஆா்ப்பரித்து கொட்டும் தண்ணீரின் வேகம் அதிகரித்துள்ளதோடு, நீரின் வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் யாரும் எதிா்பாராத விபத்துகளில் சிக்கிக்கொள்ளக் கூடாது என்பதற்காகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் வனத் துறையினா் சாா்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, செவ்வாய்க்கிழமை (ஆக.25) முதல் கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாகவும், அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் வனத் துறையினா் அறிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.