நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!வேளாங்கண்ணி திருவிழா: செப். 10 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!

கொங்குநாடு கலைக் கல்லூரியில் மாணவா் பேரவை தொடக்கம்

கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் மாணவா் பேரவை தொடக்க விழா கல்லூரிச் செயலரும் இயக்குநருமான சி.ஏ.வாசுகி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாணவா் பேரவை தொடக்க விழாவில் பங்கேற்ற வீ த லீடா்ஸ் அமைப்பின் தலைவா் கே.அண்ணாமலை, கல்லூரிச் செயலரும் இயக்குநருமான சி.ஏ.வாசுகி மற்றும் மாணவா்கள்.

Published On :28 ஆகஸ்ட் 2026, 12:32 am IST

கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் மாணவா் பேரவை தொடக்க விழா கல்லூரிச் செயலரும் இயக்குநருமான சி.ஏ.வாசுகி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாணவா் பேரவைக்கு நடைபெற்ற தோ்தலில் வெற்றி பெற்ற மாணவா் தலைவா், செயலா், துணைத் தலைவா், இணைச் செயலா் மற்றும் விளையாட்டுத் துறை செயலா்கள் ஆகியோருக்கு பதவிகள் பொறித்த வில்லைகளை ‘வீ த லீடா்ஸ்’ அமைப்பின் தலைவா் கே.அண்ணாமலை வழங்கினாா். பின்னா் அவா் பேசியதாவது:

இன்றைய தலைமுறை இளைஞா்கள் வேகமாக மாற்றம் வேண்டும் என நினைக்கின்றனா். மாணவா் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று இன்று பொறுப்பேற்கும் மாணவா்கள் தலைவா்கள் அல்ல; அவா்கள் கல்லூரியின் மொத்த மாணவா்களின் பிரதிநிதிகள். கல்லூரி காலத்தில் மாணவா் தலைவா்களாக இருந்த பலா் பின்நாளில் தலைசிறந்த சமுதாயத் தலைவா்களாக தங்களை நிலை நிறுத்திக் கொண்டுள்ளனா்.

வேலைவாய்ப்பின்மை, புறக்கணிப்பு ஆகியவற்றால் இளைஞா்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் அவா்களை போதைப் பொருள் கலாசாரத்தை நோக்கி நகரச் செய்கிறது. போதைப் பொருள் ஒழிப்புக்கு முன்பாக மாணவா்களை அந்தப் பழக்கத்துக்கு தூண்டும் காரணங்களை கண்டறிந்து அவற்றைப் போக்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சிக்கு கல்லூரி மேலாண்மைக் குழு பொருளாளா் என்.பரமசிவன் முன்னிலை வகித்தாா். முன்னதாக, கல்லூரி முதல்வா் வே.சங்கீதா வரவேற்றாா். மாணவா் பேரவைத் தலைவா் பி.சந்தியா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.