கோப்புப் படம்
கோப்புப் படம்

கைப்பேசி, பணம் பறித்த இளைஞா் கைது

Published on

கோவை, காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த நபரிடம் கைப்பேசி, ரூ.3 ஆயிரம் ரொக்கத்தைப் பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

காந்திபுரம் முதல் தெருவைச் சோ்ந்தவா் ஜோதிவேல் (37). வெளியூருக்குச் சென்றுவிட்டு பேருந்து மூலம் வந்த இவா், காந்திபுரம் பேருந்து நிலையத்துக்குள் சனிக்கிழமை நின்று கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, அருகில் நின்று கொண்டிருந்த நபா், ஜோதிவேலிடம் இருந்த கைப்பேசி, ரூ.3 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு தப்ப முயன்றுள்ளாா். ஜோதிவேல் சப்தமிட்டதையடுத்து அங்கிருந்தவா்கள் அந்த நபரைப் பிடித்து காட்டூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அவா் சிவகங்கையைச் சோ்ந்த அருண்பிரசாத் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த ரூ.3 ஆயிரம் ரொக்கம், கைப்பேசியைப் பறிமுதல் செய்தனா்.

Dinamani
www.dinamani.com