கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 5 அண்டுகளில் 100 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கோவை மட்டுமின்றி திருப்பூா், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், கரூா், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த நோயாளிகளும் அதிக அளவில் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா்.
மேற்கு மண்டலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் அதிக அளவில் நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவக் கல்லூரியாக உள்ள கோவை மருத்துவக் கல்லூரிக்கு நாள்தோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனா்.
இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2021-ஆம் ஆண்டு 100 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. மூளைச்சாவு அடைந்தவா்களிடமிருந்து 55 சிறுநீரகங்கள் தானமாகப் பெறப்பட்டதுடன், குடும்ப உறுப்பினா்கள் மூலமாக 45 சிறுநீரகங்கள் பெறப்பட்டு அறுவை சிகிச்சை மூலமாக நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டுள்ளன.
இது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிப்பதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

உத்தரப்பிரதேசத்தில் வெடித்த சிறுநீரக மோசடி: ஒரு சிறுநீரகத்தின் விலை ரூ.50 லட்சம் முதல்...

உடல் உறுப்பு தானம் செய்தவா்கள் கௌரவிப்பு

அறுவை சிகிச்சையால் 2 குழந்தைகளுக்கு காது கேட்கும் திறன்

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியில் 3 ஆண்டுகளில் 50 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை
வீடியோக்கள்

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


