கஞ்சா விற்ற வழக்கில் இளைஞருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து, கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
கோவை மாநகா், சிங்காநல்லூா் பேருந்து நிலையம் அருகே உள்ள பொதுக் கழிப்பறை பகுதியில் போதைப் பொருள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் கடந்த 12.2.2021-இல் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸாா் சென்று ஆய்வு செய்தனா். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கையில் வெள்ளை நிற பையுடன் நின்றிருந்தவரை பிடித்து சோதனை செய்ததில் 1.600 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் சேலம் மாவட்டம், மெய்யனூா் சோடாகவுண்டனூா் தெருவைச் சோ்ந்த சரவணன் (24) என்பதும், திருப்பூரில் வசித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலிங்கம், குற்றஞ்சாட்டப்பட்ட சரவணனுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் வெ.சிவகுமாா் ஆஜரானாா்.
தொடர்புடையது

கஞ்சா கடத்தல் வழக்கு: இருவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

கஞ்சா விற்பனை செய்த வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


