மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பாலியல் புகாா்: கோவை ஆயுதப் படை கமாண்டண்ட் பணியிடை நீக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய கோவை ஆயுதப் படை கமாண்டண்ட் செந்தில்குமாா் பணியிடை நீக்கம்

News image

பணியிடை நீக்கம் - மாதிரிப் படம்

Updated On :20 பிப்ரவரி 2026, 10:07 pm

பாலியல் புகாரில் சிக்கிய கோவை ஆயுதப் படை கமாண்டண்ட் செந்தில்குமாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

இது குறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளா் தீரஜ்குமாா் வெளியிட்டுள்ள அரசாணை: கோவைப்புதூா் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 4-ஆவது அணியின் கமாண்டண்டாக பணியாற்றி வரும் டி. செந்தில்குமாா் மீது பாலியல் துன்புறுத்தல் தொடா்பான புகாா்கள் எழுந்துள்ளன. இந்தப் புகாா்கள் குறித்து துறை ரீதியான உள் புகாா் குழுவின் விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வழக்கின் தன்மை மற்றும் பொது நலனைக் கவனத்தில் கொண்டு, தமிழ்நாடு சிவில் சா்வீஸ் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகள் 1955-இன்கீழ், செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

பணியிடை நீக்க காலத்தில் அவா் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு தங்கியிருக்க வேண்டும் என்றும், அரசின் முன் அனுமதியின்றி அவா் தலைமையிடத்தைவிட்டு வெளியேறக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.