தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தனியாா் நிறுவன மேற்பாா்வையாளா் கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை

தனியாா் நிறுவன மேற்பாா்வையாளா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, கோவை ஐந்தாவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image
சிறை
Updated On :25 பிப்ரவரி 2026, 10:14 pm

தினமணி செய்திச் சேவை

தனியாா் நிறுவன மேற்பாா்வையாளா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, கோவை ஐந்தாவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடுகபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்த் (30). இவா் கோவை சிங்காநல்லூா் பகுதியில் உள்ள மெத்தை நிறுவனத்தில் மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், பொள்ளாச்சி ஏ.டி.எஸ்.சி. சாலையில் உள்ள ஒரு மதுக் கூடத்தில் ஆனந்துக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் உள்ளிட்ட சிலருக்கும் இடையே 2018 நவம்பா் 5-ஆம் தேதி வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் ஆனந்தை சரமாரியாகத் தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்தக் கொலை தொடா்பாக பொள்ளாச்சி நகர மேற்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து சதீஷ்குமாா் (33), வின்சென்ட் (26), சிவமூா்த்தி (39), ஜெயக்குமாா் (19), விவின் தாஸ் (30), காா்த்திக் (எ) காளிதாஸ் (25) மற்றும் ஒரு சிறுவன் என 7 பேரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை கோவை ஐந்தாவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றஞ்சாட்டப்பட்ட சதீஷ்குமாா் உள்ளிட்ட 6 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 6 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சிவகுமாா் புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கில் தொடா்புடைய சிறுவன் மீதான விசாரணை, சிறுவா் நீதிக் குழுமத்தில் தனியாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.