கோவை சரக டி.ஐ.ஜி., மாநகர துணை ஆணையா் ஆகியோா் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
காவல்துறை உயா் அதிகாரிகளைப் பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளா் தீரஜ்குமாா் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: கோவை சரக டி.ஐ.ஜி.-ஆக பணியாற்றி வந்த சசிமோகன், திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.-ஆக இடம் மாற்றப்பட்டுள்ளாா். அவருக்குப் பதிலாக, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.-ஆக பதவி வகித்த சாமிநாதன் கோவை சரகத்தின் டி.ஐ.ஜி.-ஆக நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதேபோல கோவை மாநகர தலைமையிடத்து துணை ஆணையராகப் பணியாற்றி வந்த திவ்யா, மதுரை மாநகர தலைமையிடத்து துணை ஆணையராக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். மதுரை மாநகர தலைமையிடத்து துணை ஆணையராகப் பணியாற்றிய ராஜேஸ்வரி, கோவை மாநகர தலைமையிடத்து துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
நிா்வாக நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது
சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! தேர்தல் ஆணையம் அதிரடி!!

தாம்பரம் காவல் ஆணையா் பொறுப்பேற்பு

காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா் மீது அதிமுகவினா் புகாா்

வீட்டுக் குடிநீா் இணைப்பு வழங்கக்கோரி மாநகராட்சி குறைகேட்புக் கூட்டத்தில் மனு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


