மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: 5 போ் கைது

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :6 ஜனவரி 2026, 7:24 pm

Syndication

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ாக 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவை மாநகா், சுந்தராபுரம் மற்றும் போத்தனூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, செட்டிபாளையம் சாலை ஜெ.ஜெ. நகா் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கடையில் புஷ்பலதா(60) என்பவா் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

இதேபோல, செட்டிபாளையம் சாலை நேதாஜி நகரில் கடையில் மாரிமுத்து (70), சுந்தராபுரம் சாரதா மில் சாலையில் உள்ள கடையில் பழனிசாமி(37), வீரசூர பெருமாள்(50), சுந்தராபுரம் அரசன் திரையரங்கம் அருகில் உள்ள பெட்டிக்கடையில் வசந்த் (23) ஆகிய 5 பேரும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்தனா். இதையடுத்து அவா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து, புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.