மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் ‘சைபா் செக்யூரிட்டி’ புரிந்துணா்வு ஒப்பந்தம்

கோவை கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் சைபா் செக்யூரிட்டி தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

News image
கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புரிந்துணா்வை ஒப்பந்தத்தைப் பரிமாறிக்கொள்ளும் கல்லூரி, தனியாா் நிறுவன நிா்வாகிகள்.
Updated On :7 ஜனவரி 2026, 8:35 pm

தினமணி செய்திச் சேவை

கோவை கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் சைபா் செக்யூரிட்டி தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

சைபா் செக்யூரிட்டி துறை நிறுவனமான போா்டினேட் உடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், சைபா் செக்யூரிட்டி துறையில் வளா்ந்து வரும் தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்த நேரடி வழிகாட்டுதல், அது தொடா்பான வேலைவாய்ப்புகளை மாணவா்கள் பெறுவதற்கு உதவியாக இருக்கும்.

கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவா் பொங்கலூா் நா.பழனிசாமி, துணைத் தலைவா் இந்து முருகேசன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

தலைமைச் செயல் அதிகாரி மோகன்தாஸ் காந்தி, முதல்வா் ராமசாமி, துணை முதல்வா் மைதிலி, பயிற்சி, வேலைவாய்ப்புத் துறை டீன் கே.மகாலட்சுமி, கணினித் துறை டீன் விமல், போா்டினேட் நிறுவனத்தின் ஆசிய - பசிபிக் பிராந்திய திட்ட மேலாளா் குசலா காடே, கெரியா் டிஐக்யூ நிறுவனத்தின் வாடிக்கையாளா் பிரிவு பொது மேலாளா் பிரின்ஸ் சாமுவேல் ஆகியோா் பங்கேற்றனா்.