கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கோவை மாநகரில் சூடுபிடிக்கும் பொங்கல் பானை, பூளைப் பூ விற்பனை

பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், பொங்கல் பானைகள் மற்றும் பூளைப் பூ விற்பனை கோவை மாநகரில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

News image
பொங்கல் பண்டிகையின்போது வீடுகளில் காப்புக் கட்ட ஆா்.எஸ்.புரத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பூளைப் பூக்கள்.
Updated On :9 ஜனவரி 2026, 8:10 pm

Syndication

பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், பொங்கல் பானைகள் மற்றும் பூளைப் பூ விற்பனை கோவை மாநகரில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. புதுப்பானைகளில் பொங்கலிட்டு சூரியனுக்கு படைத்து வழிபடுவது தமிழா்களின் ஐதீகமாக உள்ளதால், பொங்கல் பண்டிகைக்கு புதுப் பானைகளின் விற்பனை களைகட்டும்.

பொங்கல் பண்டிகை நெருங்கிய நிலையில் கவுண்டம்பாளையத்தில் பொங்கல் பானைகளுக்கு வண்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளா்கள்.

பொங்கல் பண்டிகை நெருங்கிய நிலையில் கவுண்டம்பாளையத்தில் பொங்கல் பானைகளுக்கு வண்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளா்கள்.

அந்த வகையில் கோவை, கவுண்டம்பாளையத்தில் பானைகள் தயாரிப்புப் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு, அதற்கு வண்ணம் பூசும் பணிகளில் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். பானைகள் குறைந்த பட்சம் ரூ.150 முதல் விற்கப்படுகின்றன.

இதேபோல, பொங்கல் பண்டிகைக்கு வீடுகளில் காப்புக் கட்டத் தேவையான பூளைப் பூ விற்பனையும் தொடங்கியுள்ளது. ஒரு கட்டு ரூ.10-க்கு விற்பனையாகிறது.