தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சத்தியமங்கலம் சாலையோரங்களில் களைகட்டும் பொங்கல் பூக்கள் விற்பனை

சத்தியமங்கலம் பகுதியில் பொங்கல் பண்டிகைக்கான ஆவாரம்பூ, மஞ்சள், பூளைப் பூ மற்றும் வேப்பிலை ஆகிய பொருள்கள் சாலையோரம் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன.

News image
போகி  பண்டிகையையொட்டி  சத்தியமங்கலத்தில்  புதன்கிழமை  விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தய  ஆவாரம்,  பூளைப் பூக்கள்.
Updated On :15 ஜனவரி 2026, 12:50 am

Syndication

சத்தியமங்கலம் பகுதியில் பொங்கல் பண்டிகைக்கான ஆவாரம்பூ, மஞ்சள், பூளைப் பூ மற்றும் வேப்பிலை ஆகிய பொருள்கள் சாலையோரம் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன.

பொங்கல் பண்டிகையையொட்டி சத்தியமங்கலம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளதால் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கேற்ப வீடுகளை சுத்தம் செய்து வெள்ளை அடித்து தைப்பொங்கலை வரவேற்றனா்.

கிராமப்புறங்களில் வீடுகள், வயல்வெளிகள், தொழுவம், வணிகக் கடைகள் ஆகியவற்றில் கூரைகள், தாழ்வாரங்களில் பூளைப்பூ, ஆவாரம்பூ, வேம்பு மற்றும் மஞ்சள் ஆகியவற்றை சோ்த்து காப்புக் கட்டுவது வழக்கம். அதன்படி போகி பண்டிகை நாளான புதன்கிழமை சத்தியமங்கலத்தில் தினசரி சந்தை மற்றும் சாலையோரங்களில் பொங்கல் பூக்கள் விற்பனை களைகட்டியது.

ஆவராம்பூ கட்டு ஒன்று ரூ.20-க்கும், பூளைப் பூ ரூ.25-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மஞ்சள் ஒன்று ரூ.35-க்கும், செங்கரும்பு ஜோடி ரூ.100-க்கும் விற்கப்பட்டது.