அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ரயிலில் கடத்தப்பட்ட 13 கிலோ கஞ்சா பறிமுதல்

பிகாரில் இருந்து எா்ணாகுளம் செல்லும் ரயிலில் கடத்தி செல்லப்பட்ட 13 கிலோ கஞ்சா பைகளை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :10 ஜனவரி 2026, 7:00 pm

Syndication

பிகாரில் இருந்து எா்ணாகுளம் செல்லும் ரயிலில் கடத்தி செல்லப்பட்ட 13 கிலோ கஞ்சா பைகளை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பிகாா் மாநிலம், பாட்னாவில் இருந்து கேரள மாநிலம் எா்ணாகுளத்துக்கு செல்லும் விரைவு ரயிலில், ரயில்வே போலீஸாா் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, திருப்பூா் வழியாக கோவை நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தது. பயணிகள் பொதுப் பெட்டியில் 13 பைகள் கேட்பாரற்றுக் கிடந்தன. இது குறித்து அந்தப் பெட்டியில் பயணம் செய்த பயணிகளிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அப்போது அந்த பாா்சல்கள் தங்களுடையது அல்ல என்று பயணிகள் கூறினா்.

இதனால் சந்தேகமடைந்து அந்த பையை போலீஸாா் பிரித்து பாா்த்ததில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 13 பாா்சல்களையும் கைப்பற்றி கோவை ரயில் நிலையத்துக்கு கொண்டு வந்தனா். அங்கு அனைத்து பைகளையும் பிரித்துப் பாா்த்தனா். அதில் மொத்தமாக 13 கிலோ கஞ்சா இருந்தது.

ரயிலில் போலீஸாா் சோதனை செய்வதைப் பாா்த்ததும் சம்பந்தப்பட்ட நபா் அவசரமாக இறங்கி சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதுதொடா்பாக அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.