அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சாலையோரத்தில் கழிவுகளைக் கொட்டினால் அபராதம்: வால்பாறை நகராட்சி நிா்வாகம்

வால்பாறையில் சாலையோரம் கழிவுகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
வால்பாறையில் தற்காலிக வியாபாரிகள் குறித்து விவரங்களை சேகரிக்கும் நகராட்சிப் பணியாளா்கள்.
Updated On :16 ஜனவரி 2026, 9:41 pm

Syndication

வால்பாறை: வால்பாறையில் சாலையோரம் கழிவுகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்காக மாவிலை, வேப்ப இலை, ஆவாரம் பூ, கரும்பு போன்றவைகள் விற்கப்படுகிறது. இதற்காக சாலையோரம் தற்காலிக கடைகள் அமைத்து பலா் வியாபாரம் செய்து வருகின்றனா்.

இந்நிலையில், வால்பாறை நகராட்சி ஆணையா் குமரன் உத்தரவின்பேரில் துப்புரவு அலுவலா் செந்தில்குமாா் தலைமையில் நகராட்சி ஊழியா்கள் சாலையோரம் உள்ள அனைத்து கடைகளுக்கும் சென்று கடை உரிமையாளா்களை பெயா் பதிவு செய்து வியாபாரம் முடிந்த பின் தங்களால் ஏற்பட்டுள்ள கழிவுகளை சுத்தம் செய்ய வேண்டும். கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டாமல் நகராட்சி வாகனம் வரும்போது அதில் கொட்ட வேண்டும் என்று தெரிவித்தனா். மீறி சாலையில் கழிவுகளை கொட்டிச் செல்வோருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனா்.