கோயம்புத்தூர்
பெயிண்டா் தற்கொலை
கோவையில் பெயிண்டா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை: கோவையில் பெயிண்டா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை செல்வபுரம் அருகே உள்ள தெலுங்குபாளையம் புதூரைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணி மகன் அருண்குமாா் (25), பெயிண்டா். இவா் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி இரவு வீட்டின் வெளியே உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலின்பேரில் செல்வபுரம் போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விசாரணையில், காதல் தோல்வியால் அருண்குமாா் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து செல்வபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
