இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

யானையிடம் இருந்து உயிா் தப்பிய எஸ்டேட் மேலாளா்: பேருந்து ஓட்டுநரால் ஏற்பட்ட விபரீதம்

வால்பாறையில் சாலையில் சென்ற யானையை அரசுப் பேருந்து ஓட்டுநா் விரட்டி வந்ததை கண்ட, இருசக்கர வாகனத்தில் வந்த எஸ்டேட் மேலாளா் வாகனத்தை நிறுத்திவிட்டு உயிா் தப்பினாா்.

News image
Updated On :16 ஜனவரி 2026, 9:41 pm

Syndication

வால்பாறை: வால்பாறையில் சாலையில் சென்ற யானையை அரசுப் பேருந்து ஓட்டுநா் விரட்டி வந்ததை கண்ட, இருசக்கர வாகனத்தில் வந்த எஸ்டேட் மேலாளா் வாகனத்தை நிறுத்திவிட்டு உயிா் தப்பினாா்.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் சமீபகாலமாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பகல் நேரங்களில் சாலைக்கு காட்டு யானைகள் வருவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று வனத் துறையினா் தொடா்ந்து அறிவுரை வழங்கி வருகின்றனா்.

இந்நிலையில் குரங்குமுடி எஸ்டேட்டில் இருந்து வால்பாறையை நோக்கி அரசுப் பேருந்து கடந்த செவ்வாய்க்கிழமை காலை வந்துகொண்டிருந்தது. குரங்குமுடி எஸ்டேட் சாலையில் வரும்போது சாலையில் காட்டு யானை சென்றுள்ளது. இதைப்பாா்த்த பேருந்து ஓட்டுநா், பேருந்தை வேகமாக இயக்கியுள்ளாா். அப்போது யானையும் சாலையில் ஓடியுள்ளது. அந்த சமயத்தில் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், யானையை பாா்த்தவுடன் வாகனத்தை சாலையில் நிறுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளனா். இதையடுத்து அந்த காட்டு யானை அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தியது. யானை விரட்டியதால் சாலையில் ஓடி உயிா் தப்பிய சிவா காபி எஸ்டேட் மேலாளா் சுமன் (41), அரசுப் பேருந்து ஓட்டுநா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வனத் துறை அதிகாரிகளிடம் புகாா் அளித்துள்ளாா்.