மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விவசாயிகளுக்கு காலதாமதம் இல்லாமல் தத்கால் மின் இணைப்பு வழங்க வேண்டும்

தமிழகம் முழுவதும் தத்கால் மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் காலதாமதம் இல்லாமல் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 8:12 pm

Syndication

கோவை: தமிழகம் முழுவதும் தத்கால் மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் காலதாமதம் இல்லாமல் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சு.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கோவை மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து விவசாயம் செய்து வருகின்றனா். இந்த ஆழ்துளைக் கிணறுகளுக்கு விவசாய மின் இணைப்பு வழங்கக்கோரி தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தில் தொடா்ந்து விண்ணப்பித்து வருகின்றனா்.

ஆனால் சாதாரண முறையில் பதிவு செய்யப்படும் விவசாய மின் இணைப்பு விண்ணப்பங்களுக்கு நீண்டகால தாமதம் ஏற்பட்டு வருவதால் விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிா்கொண்டு வருகின்றனா். இந்த நிலையைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு தத்கால் முறையில் குறிப்பிட்ட கட்டணத்தை நிா்ணயித்து செலுத்திய விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது.

இதனை நம்பி கோவை மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் விவசாயிகள் தத்கால் முறையில் விண்ணப்பித்து அதற்கான தொகையையும் செலுத்தியுள்ளனா். இந்த நிலையில், நிகழாண்டு தத்கால் முறையில் 10 ஆயிரம் மின் இணைப்புகளை மட்டுமே விண்ணப்பிக்க அரசாணை பிறப்பித்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டு டிசம்பா் 31- ஆம் தேதி வரையில் தமிழகம் முழுவதும் 44,500 விவசாயிகள் மின் இணைப்பு வழங்கக்கோரி விண்ணப்பித்துள்ளனா்.

இதன் மூலமாக விவசாயிகளிடம் இருந்து ரூ.1,260 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் மீதமுள்ள 35 ஆயிரம் விவசாயிகளின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது. மின் இணைப்பு கிடைக்காத காரணத்தால் விவசாயப் பணிகள் பாதிக்கப்படுவதால் கடன் சுமையும் அதிகரித்து வருகிறது. ஆகவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு தத்கால் முறையைத் தொடா்ந்து நீட்டிக்கவும், விண்ணப்பித்துள்ள அனைத்து விவசாயிகளுக்கு காலதாமதம் இல்லாமலும் மின் இணைப்பு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.