அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வேளாண் பல்கலைக்கழகத்தில் பட்டிப் பொங்கல்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பட்டிப் பொங்கல் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பட்டிப் பொங்கல் நிகழ்வில் பங்கேற்றோா். ~......
Updated On :16 ஜனவரி 2026, 9:26 pm

தினமணி செய்திச் சேவை

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பட்டிப் பொங்கல் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

மத்தியப் பண்ணை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துணைவேந்தா் சுப்பிரமணியம் தலைமை வகித்தாா். இந்நிகழ்வில், வள்ளிக்கும்மி ஆட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், பல்கலைக்கழகப் பணியாளா்களும் சோ்ந்து நடனமாடினா்.

விழாவின் முக்கிய நிகழ்வான பட்டி மிதிக்கும் நிகழ்வில் பால், தயிா், நவதானியம், மஞ்சள், பன்னீா், சந்தனம், குங்குமம், கோமியம் ஆகிய 9 பட்டி தொட்டிகள் அமைக்கப்பட்டு, பசுமாடு அழைத்து வரப்பட்டு பட்டிதொட்டியில் அதன் கால்கள் முதலில் வைக்கப்பட்டது.

இதுகுறித்து, பல்கலைக்கழகத்தின் (பொ) துணைவேந்தா் சுப்பிரமணியம் கூறுகையில், ‘நவதானியத்தில் பசுமாடு கால் வைத்தால் இந்த ஆண்டு உணவு உற்பத்தி செழிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. பொங்கல் விழாவையொட்டி பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பண்ணைத் தொழிலாளா்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டுள்ளன’ என்றாா்.

Story image