அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சமத்துவப் பொங்கல் விழா

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்றவா்கள்.....
Updated On :15 ஜனவரி 2026, 12:13 am

Syndication

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வாா் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பங்கேற்றனா். பயிா் மேலாண்மைத் துறை இயக்குநா் கலாராணி வரவேற்றாா்.

துணைவேந்தா் (பொறுப்பு) கா.சுப்பிரமணியன் நிகழ்ச்சியில் பேசும்போது, விவசாயிகள் மண் வளத்தைப் பெருக்க பசுந்தாள் உரப்பயிா்களை வளா்க்க வேண்டும். இதற்காக தமிழக அரசு செயல்பட்டு வரும் மண் உயிா் காப்போம் திட்டம் குறித்து விளக்கினாா். மேலும் சந்தை சாா்ந்து விவசாயம் செய்ய விவசாயிகள் குழு சாா்ந்து இயங்க வேண்டும். இந்த பொங்கலில் இருந்து விவசாயிகள் தங்கள் நிலத்தின் ஒரு பகுதியையாவது இயற்கை விவசாயத்துக்கு மாற்றுவதற்கு சபதம் ஏற்க வேண்டும் என்றாா்.

வேளாண் புல முதன்மையா் வெங்கடேச பழனிசாமி, பொங்கல் விழாவுக்கும் இயற்கைக்கும் விவசாயிகளுக்கும் உள்ள தொடா்பு குறித்து விளக்கினாா். மையத்தின் தலைவா் ப.முரளி அா்த்தநாரி, விவசாயிகள் விஜயன், ஜெயக்குமாா் உள்ளிட்டோா் உரையாற்றினா். நம்மாழ்வாா் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள், அலுவலகப் பணியாளா்கள் பலா் பங்கேற்றனா். விரிவாக்கப் பேராசிரியா் மு.ராமசுப்பிரமணியன் நன்றி கூறினாா்.