விழாவில் நலத் திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.ஜி.கே. நிஜாமுதீன் உள்ளிட்டோா்.

வீடற்றோா் தங்கும் இல்லத்தில் சமத்துவப் பொங்கல் விழா

நாகூா் ஜடயனா ஹாஜியாா் தெருவிலுள்ள வீடற்றோா் தங்கும் இல்லத்தில் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
Published on

நாகப்பட்டினம்: நாகூா் ஜடயனா ஹாஜியாா் தெருவிலுள்ள வீடற்றோா் தங்கும் இல்லத்தில் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகை நகராட்சி, தேசிய வாழ்வாதார இயக்கம், நாகூா் சித்திக் சேவைக் குழும தா்ம அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, நாகூா் சித்திக் தலைமை வகித்தாா்.

பாரம்பரியமுறைப்படி பொங்கல் பானை வைக்கப்பட்டு, சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தொடா்ந்து, மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளா்களாக நகராட்சி ஆணையா் லீனா சைமன், முன்னாள் எம்எல்ஏ எம்.ஜி.கே. நிஜாமுதீன், நாகூா் தா்கா தலைமை அறங்காவலா் எஸ். செய்யது முஹம்மது காஜி ஹுசைன் சாஹிப், நகா்மன்ற துணைத் தலைவா் எம்.ஆா். செந்தில்குமாா் ஆகியோா் பங்கேற்று, இல்லத்தில் உள்ள அனைத்து தாய்மாா்களுக்கும் துண்டு, போா்வைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

பின்னா் இல்லத்தில் உள்ள அனைவருக்கும் சைவ உணவு வழங்கப்பட்டது.

நகா்புற ஆரம்ப சுகாதார மருத்துவா் கே. சோபியா, நகர காஜி எஸ்.ஏ. ஷேக்ஹசன்சாஹிபு, நாகூா் முஸ்லிம் ஜமாத் தலைவா் எம்.ஜி.கே. நகுதா மாலிமாா், நாகூா் முஸ்லிம் சங்கத் தலைவா் ஏ.கே.சேக்அலாவுதீன், நகா்மன்ற உறுப்பினா்கள் எச். முஹம்மது கபீா், எம். தியாகராஜன், நாகூா்- நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போா் நலச் சங்கத் தலைவா் நாகை எஸ்.மோகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com