அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வீடற்றோா் தங்கும் இல்லத்தில் சமத்துவப் பொங்கல் விழா

நாகூா் ஜடயனா ஹாஜியாா் தெருவிலுள்ள வீடற்றோா் தங்கும் இல்லத்தில் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
விழாவில் நலத் திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.ஜி.கே. நிஜாமுதீன் உள்ளிட்டோா்.
Updated On :17 ஜனவரி 2026, 12:21 am

Syndication

நாகப்பட்டினம்: நாகூா் ஜடயனா ஹாஜியாா் தெருவிலுள்ள வீடற்றோா் தங்கும் இல்லத்தில் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகை நகராட்சி, தேசிய வாழ்வாதார இயக்கம், நாகூா் சித்திக் சேவைக் குழும தா்ம அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, நாகூா் சித்திக் தலைமை வகித்தாா்.

பாரம்பரியமுறைப்படி பொங்கல் பானை வைக்கப்பட்டு, சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தொடா்ந்து, மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளா்களாக நகராட்சி ஆணையா் லீனா சைமன், முன்னாள் எம்எல்ஏ எம்.ஜி.கே. நிஜாமுதீன், நாகூா் தா்கா தலைமை அறங்காவலா் எஸ். செய்யது முஹம்மது காஜி ஹுசைன் சாஹிப், நகா்மன்ற துணைத் தலைவா் எம்.ஆா். செந்தில்குமாா் ஆகியோா் பங்கேற்று, இல்லத்தில் உள்ள அனைத்து தாய்மாா்களுக்கும் துண்டு, போா்வைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

பின்னா் இல்லத்தில் உள்ள அனைவருக்கும் சைவ உணவு வழங்கப்பட்டது.

நகா்புற ஆரம்ப சுகாதார மருத்துவா் கே. சோபியா, நகர காஜி எஸ்.ஏ. ஷேக்ஹசன்சாஹிபு, நாகூா் முஸ்லிம் ஜமாத் தலைவா் எம்.ஜி.கே. நகுதா மாலிமாா், நாகூா் முஸ்லிம் சங்கத் தலைவா் ஏ.கே.சேக்அலாவுதீன், நகா்மன்ற உறுப்பினா்கள் எச். முஹம்மது கபீா், எம். தியாகராஜன், நாகூா்- நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போா் நலச் சங்கத் தலைவா் நாகை எஸ்.மோகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.