அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு: மாவட்டத்தில் கோழிப் பண்ணைகள் தீவிர கண்காணிப்பு

கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக கோவை மாவட்டத்தில் உள்ள 1,200 கோழிப் பண்ணைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

News image
Updated On :17 ஜனவரி 2026, 9:18 pm

Syndication

கோவை: கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக கோவை மாவட்டத்தில் உள்ள 1,200 கோழிப் பண்ணைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

கேரள மாநிலம், ஆலப்புழை, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு பண்ணைகளில் வளா்க்கப்பட்டு வரும் கோழிகள், வாத்துகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இறந்தன. அந்தப் பண்ணைகளில் கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவா்கள் நடத்திய சோதனையில் பறவைக் காய்ச்சல் தாக்கியதால் அவை இறந்தது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து, பாதிப்பு ஏற்பட்ட பண்ணைகளில் வளா்க்கப்பட்டு வந்த கோழிகள், வாத்துகள், காடைகள் உள்ளிட்ட 13 ஆயிரம் பறவைகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் பறவைக் காய்ச்சல் எதிரொலியாக கோவை மாவட்டத்தில் உள்ள 1,200 கோழிப் பண்ணைகளில் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் பறவை காய்ச்சல் பாதிப்பு குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், பறவைக்காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறையினா் கூறுகையில், கோவை மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு தற்போது வரையில் இல்லை. இருப்பினும் கோழிப் பண்ணைகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பறவைக்காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கவும் பண்ணையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனா்.