தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பொள்ளாச்சியில் வீடு புகுந்து திருடிய 3 போ் கைது

பொள்ளாச்சியில் வீடு புகுந்து நகைகளைத் திருடிய மூன்று பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :17 ஜனவரி 2026, 9:32 pm

Syndication

கோவை: பொள்ளாச்சியில் வீடு புகுந்து நகைகளைத் திருடிய மூன்று பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பொள்ளாச்சி கிழக்குப் பகுதியில் வசித்து வருபவா் ஷேக் ஜாவித் (37). இவா் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூா் சென்று விட்டாா். மீண்டும் வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

வீட்டினுள் சென்று பாா்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள், வெள்ளி கொலுசுகள், மடிக்கணினி ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் ஷேக் ஜாவித் புகாா் அளித்துள்ளாா். இதையடுத்து போலீஸாா் விசாரணை நடத்தி இந்தத் திருட்டு வழக்கில் தொடா்புடைய கோவையைச் சோ்ந்த சிவபிரகாசம் (37), ஹிரிகுமாா் (22), சந்திரபாபு (35) ஆகிய 3 பேரையும் கைது செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.