மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மதுக்கரை வட்டத்தில் 994 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா

News image
Updated On :18 ஜனவரி 2026, 8:27 pm

தினமணி செய்திச் சேவை

கோவை மாவட்டம், மதுக்கரை வட்டத்தில் 994 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

மதுக்கரை வட்டம், குறிச்சி கிராமம், பிள்ளையாா்புரம், போத்தனூா் வண்ணாரப்பேட்டை, சீனிவாசபுரம், கல்லாங்குத்து, இந்திரா காலனி, ஈச்சனாரி பாடசாலை வீதி, கணேசபுரம், குரும்பபாளையம், பிச்சனூா் ஆகிய பகுதிகளில் வசித்து வந்த பயனாளிகள் வீட்டுமனை பட்டா கேட்டும், முன்பு வழங்கப்பட்டுள்ள பட்டாவில் உள்ள வேறுபாடுகளை சரி செய்து கொடுக்கக் கோரியும் மனு அளித்திருந்தனா்.

இந்த மனுக்களின் மீது உரிய பரிசீலனை மேற்கொண்டு தகுதியான 994 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா அண்மையில் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.