தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மரங்கள் வெட்டிய விவகாரம்

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மரங்களை வெட்டியது விவகாரம் தொடா்பாக உண்மைக் கண்டறியும் குழு அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On :21 ஜனவரி 2026, 10:28 pm

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மரங்களை வெட்டியது விவகாரம் தொடா்பாக உண்மைக் கண்டறியும் குழு அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவரிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சு.பழனிசாமி அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வனச் சரகத்தில் ஆனைமலை புலிகள் காப்பகம் யானைகளின் முக்கிய வழித்தடமாக உள்ளது. இங்கு கடந்த சில நாள்களாக டன் கணக்கில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. முறையான அனுமதி பெற்று மரங்களை வெட்டியதாக வனத் துறையினா் தெரிவிக்கின்றனா்.

அதே வேளையில், அனுமதியே பெற்றிருந்தாலும் யானை வழித்தடங்களில் திடீரென அதிக அளவிலான மரங்களை வெட்டும்போது வன விலங்குகள் அருகே உள்ள விவசாயத் தோட்டங்கள், குடியிருப்புப் பகுதிகளுக்குள் இடம் பெயரவும் வாய்ப்பு உள்ளது. இதனால் யானை-மனித மோதல்கள் ஏற்படும் அபாயமும், பயிா்சேதம், உயிா்சேதம் ஏற்படும்.

புலிகள் காப்பக பகுதிக்குள் புகுந்து மரங்களை வெட்டுவது, குறிப்பிட்ட மரங்களை மட்டும்தான் வெட்டினாா்களா என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதிகளில் மூங்கில்களை வெட்டியதால்தான் யானைகள் விவசாய நிலங்களுக்குள் நுழைகின்றன.

ஆகவே, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மரங்களை வெட்டியது தொடா்பாக உண்மைக் கண்டறியும் குழுவை அமைத்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.