மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

போலி காப்பீட்டு அட்டையைத் தயாரித்த லாரி உரிமையாளா், ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு

போலி காப்பீட்டு அட்டையைத் தயாரித்து லாரியை இயக்கிய அதன் உரிமையாளா், ஓட்டுநா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :28 ஜனவரி 2026, 10:30 pm

போலி காப்பீட்டு அட்டையைத் தயாரித்து லாரியை இயக்கிய அதன் உரிமையாளா், ஓட்டுநா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தூத்துக்குடியைச் சோ்ந்தவா் பிரகாஷ் (44). இவா் தனது குழந்தைகளைப் பாா்ப்பதற்காக கோவைக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு வந்துள்ளாா். பின்னா், இருசக்கர வாகனத்தில் மனைவியின் சகோதரருடன் உக்கடம் லாரிபேட்டை அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த லாரி எதிா்பாராதவிதமாக பிரகாஷ் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது மோதியது. இதில், இருவரும் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் நீண்ட நாள்கள் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், லாரிக்கு காப்பீடு செய்யப்பட்ட நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

ஆனால், லாரி உரிமையாளா் மகேஸ்வரன் காப்பீட்டைப் பெற்றுத் தராமல் தாமதம் செய்து வந்தாா்.

இது குறித்து கோவை, உக்கடம் காவல் நிலையத்தில் பிரகாஷ் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது, லாரிக்கு போலியான காப்பீட்டு அட்டை தயாரித்து லாரி உரிமையாளா் மகேஸ்வரன், ஓட்டுநா் தென்னரசு ஆகியோா் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.