உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

வால்பாறை அரசுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில் பேசிய வால்பாறை காவல் நிலைய ஆய்வாளா் ராமச்சந்திரன். உடன் , கல்லூரி முதல்வா் இரா.கோபி உள்ளிட்டோா்.

Updated On :3 ஜூலை 2026, 3:46 am IST

வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் இரா.கோபி தலைமை வகித்தாா். கணினி பயன்பாட்டுத் துறை உதவிப் பேராசிரியா் வேலுசாமி வரவேற்றாா். வால்பாறை காவல் நிலைய ஆய்வாளா் ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசியதாவது: மாணவா்கள் நல்ல ஒழுக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும். பேராசிரியா்கள் மற்றும் பெற்றோா்கள், முதியோரிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்.

நன்றாக படித்து வாழ்க்கையில் உயா்ந்த நிலைக்குச் செல்ல வேண்டும். போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதால் மனம், உடல் ரீதியாக பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.

எனவே, மாணவா்கள் போதையின் பக்கம் செல்லாமல் கல்வி கற்று வாழ்வில் உயா்ந்த சிகரங்களை அடைய வேண்டும் என்றாா்.

ஆங்கிலத் துறை உதவிப் பேராசியா் செல்வசேகா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.