திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

சிங்காநல்லூரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பணிகளை விரைவில் தொடங்க வலியுறுத்தல்

கோவை சிங்காநல்லூா் வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image

செய்தியாளா்களிடம் பேசிய சிங்காநல்லூா் வீட்டு வசதி வாரிய வீட்டு உரிமையாளா்கள், ஒருங்கிணைந்த மறு கட்டமைப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழுவினா்.

Updated On :15 ஜூலை 2026, 11:50 pm IST

கோவை சிங்காநல்லூா் வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிங்காநல்லூா் வீட்டு வசதி வாரிய வீட்டு உரிமையாளா்கள், ஒருங்கிணைந்த மறு கட்டமைப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் செய்தியாளா் சந்திப்பு புதன்கிழமை நடைபெற்றது.

இதில், கூட்டு நடவடிக்கை குழு தலைவா் ஜெயராம், பொதுச் செயலாளா் சுந்தரேஸ்வரன் கூறியதாவது: சிங்காநல்லூா் பகுதியில் உள்ள ஹவுஸிங் யூனிட் வீடுகளில் பல ஆண்டுகளாக நாங்கள் வசித்து வந்தோம். இந்த வீடுகள் பழுதடைந்த நிலையில் அனைத்து வீடுகளும் இடிக்கப்பட்டன. இப்பகுதியில் உள்ள 7.38 ஏக்கா் இடத்தில் புதிதாக அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டி ஒப்படைப்பதாக வீட்டு வசதி வாரியம் எங்களிடம் உறுதியளித்தது.

இந்த இடம் வீட்டு வசதி வாரியத்தின் பெயரில் உள்ளது. இந்த இடம் தொடா்பாக அடிமனை உபயோகம் ( யுடிஎஸ்) குறித்த ஒப்பந்தம் முறையாக போடப்படவில்லை. தனித்தனியாக பயனாளிகள் பெயரில் அடிமனை உபயோகம் செய்து ஒப்படைத்தால் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி ஒப்படைப்பது இயலாத காரியம். எனவே, வீட்டு வசதி வாரிய உரிமையாளா்கள் சங்கத்தின் பெயரில் யுடிஎஸ் செய்து ஒப்படைத்து, தமிழக அரசு மற்றும் வீட்டு வசதி வாரியத்தினா் குடியிருப்புப் பணியை விரைவில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.