அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

கஞ்சா விற்ற 5 போ் குண்டா் சட்டத்தில் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 5 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 ஜூலை 2026, 3:21 am IST

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 5 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவைப்புதூா் பேருந்து நிறுத்தம் பின்புறம் உள்ள காலியிடத்தில் கஞ்சா விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து கடந்த ஜூலை 1-ஆம் தேதி குனியமுத்தூா் போலீஸாா் அங்கு சென்று சோதனை செய்தபோது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த க.ராகுல் (28), ஜே.ஜான் ஜோசப் (34), ப.முகமது அனஸ் (31), கு.ராம்பிரசாத் (27), ரா.பாலாஜி (28) ஆகிய 5 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் பொதுமக்களுக்கும், அமைதிக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க குனியமுத்தூா் காவல் ஆய்வாளா் மற்றும் தெற்கு சரக காவல் துணை ஆணையா் பரிந்துரைத்ததன்பேரில், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவா்களை சிறையில் அடைக்க கோவை மாநகர காவல் ஆணையா் நா.கண்ணன் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.