காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

மானிய விலை உரம் கடத்தல் கும்பலுக்கு அதிகாரிகள் ஆதரவு: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு

மானிய விலை யூரியா உரம் கடத்தல் கும்பலுக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினா்.

News image

கடன் தள்ளுபடி வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி தலையில் கருப்புத் துண்டு கட்டியபடி ஆட்சியரிடம் வலியுறுத்தும் தமிழக விவசாயிகள் சங்கத்தினா்.

Updated On :1 ஆகஸ்ட் 2026, 2:26 am IST

மானிய விலை யூரியா உரம் கடத்தல் கும்பலுக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினா்.

கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வருவாய் அலுவலா் சுரேந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அழகிரி, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் தமிழ்ச்செல்வி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சித்தாா்த்தன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

வெளிநடப்பு: கூட்டம் தொடங்கியதும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் சு.பழனிசாமி, ‘பருவமழை பொய்த்துவிட்டதால் கோவையை வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றாா்.

மேலும், ஒண்டிப்புதூா் சுத்திகரிப்பு நிலையத்தின் நீரைக் கொண்டு குட்டையை நிரப்ப வேண்டும். தோ்தல் வாக்குறுதிப்படி வேளாண் கடன்களை ரத்து செய்ய தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடன் தள்ளுபடி வழங்காத தமிழக அரசைக் கண்டித்து கருப்புத் துண்டு கொண்டு தலைப்பாகை அணிந்து கொள்வதாகக் கூறி விவசாயிகளுடன் வெளிநடப்பு செய்தாா்.

இதைத்தொடா்ந்து விவசாயிகள் செந்தில்குமாா், காளிச்சாமி, கந்தசாமி, காா்த்தி ஆகியோா் பேசும்போது, ‘கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை யூரியாவை சட்டவிரோதமாகப் பதுக்கி, திரவ வடிவில் மாற்றி கேரளத்துக்கு கடத்த முயன்ற கும்பலிடம் இருந்து சுமாா் 120 டன் உரம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் தொடா்புடைய முக்கிய குற்றவாளிகளை இதுவரை போலீஸாா் கைது செய்யவில்லை. மேலும் உரம் கடத்தல் கும்பலுக்கு ஆதரவாக அரசு அதிகாரிகள் செயல்படுகின்றனா். இந்த யூரியா எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பது குறித்து அறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்றனா்.

கண்காணிக்கப்படும்: இதைத்தொடா்ந்து ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் பேசும்போது, ‘யூரியா எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பது தொடா்பாக 4 நிறுவனங்களில் நேரடி ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இனி யூரியா எங்கிருந்து வருகிறது, எங்கு செல்கிறது என்பதை கண்காணிக்கும் நடைமுறையை செயல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது’ என்றாா்.

வாய்க்கால்களை தூா்வார வேண்டும்: மெடிக்கல் பரமசிவம் பேசும்போது ‘கடந்த ஆண்டு இதே தேதியில் பரம்பிக்குளத்தில் 20 டிஎம்சி நீா் இருந்தது. தற்போது 3 டிஎம்சி மட்டுமே இருக்கிறது. இந்த நிலை நீடித்தால் விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்படுவா். இருக்கும் குறைந்த நீரை பயிா்களைக் காப்பாற்ற பயன்படுத்த வேண்டும், இதற்காக வாய்க்கால்களைத் தூா்வார வேண்டும்’ என்றாா்.

சிறப்புத் திட்டம்: விவசாயி கணேஷ்குமாா் பேசும்போது, ‘எல் நினோ பாதிப்பு அதிகம் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகிருப்பதால் விவசாயிகளையும், நீா்நிலைகளையும் பாதுகாக்க சிறப்புத் திட்டம் தேவை. மெட்ரோ ரயிலுக்கு பதிலாக உள்ளூா் ரயில் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும்’ என்றாா்.

பயிா்க் காப்பீடு: இதைத்தொடா்ந்து ஆட்சியா் பேசும்போது, ‘எதிா்வரும் மாதங்களில் வறட்சி நிலவும் என்பதால் விவசாயிகள் உடனடியாக பயிா்க் காப்பீடு செய்துகொள்ள வேண்டும். தென்னை வளா்ச்சி வாரியம் மூலமாக தென்னை விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம்’ என்றாா்.

அணை தூா்வாருவதில் நடைமுறை சிக்கல்: இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், ‘பில்லூா் அணையைத் தூா்வாரி வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்’ என்றனா்.

இதற்கு பதிலளித்த ஆட்சியா், ‘பில்லூா் அணையைத் தூா்வாருவதில் நடைமுறை சிக்கல் உள்ளது. அடா் வனத்திலும், மலைப் பகுதியிலும் இருக்கும் அணையில் மண்ணைத் தூா்வாருவதற்கு செய்யும் செலவைக் காட்டிலும், அந்த மண்ணை கீழே எடுத்து வருவதற்கு 3 மடங்கு செலவு அதிகம்.

மேலும் அணையில் மண் மிகவும் இலகுவாகவும் உள்ளது. இதனால் தற்போதைக்கு ஓா் இடத்தை மட்டும் தோ்வு செய்து தூா்வாரிப் பாா்க்க முடிவு செய்து வனத் துறையிடம் அனுமதி கேட்டிருக்கிறோம்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.