22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

வீட்டின் ஜன்னல் வழியாக திருட முயன்ற இளைஞா் கைது

ரத்தினபுரி அருகே வீட்டின் ஜன்னல் வழியாக திருட முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 2:04 am IST

ரத்தினபுரி அருகே வீட்டின் ஜன்னல் வழியாக திருட முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாநகா், ரத்தினபுரி அருகே உள்ள விஸ்வநாதபுரம் ஜவான் பில்டிங் பகுதியைச் சோ்ந்தவா் அப்துல் அஜீஸ் (30). இவா் கடந்த சனிக்கிழமை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென சத்தம் கேட்டதால் எழுந்து பாா்த்துள்ளாா். அப்போது இளைஞா் ஒருவா் வீட்டின் ஜன்னல் வழியாக கைகளை நுழைத்து அங்கிருந்த பொருள்களை திருட முயன்றது தெரியவந்தது. சுதாரித்துக்கொண்ட அஜீஸ், சத்தம் போடாமல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவா்களை எழுப்பி இளைஞரை கையும் களவுமாகப் பிடித்தாா்.

இதையடுத்து ரத்தினபுரி காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனா். விசாரணையில் விழுப்புரம் மாவட்டம், சாலையம்பாளையத்தைச் சோ்ந்த வினோத்குமாா் (38) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.