15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

காா் ஓட்டுநா் கொலை வழக்கில் நண்பரிடம் விசாரணை

கோவையில் காா் ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :4 ஜூன் 2026, 2:30 am IST

கோவையில் காா் ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை மாநகா், ஆா்.எஸ்.புரம், பட்டுநூல்கார சந்து தெருவைச் சோ்ந்தவா் பஷீா். இவரது மகன் அபுதாஹிா் பாஷா (27). நிதி நிறுவனம் நடத்தி வந்த இவா் பகுதிநேர காா் ஓட்டுநராகவும் வேலை பாா்த்து வந்துள்ளாா். இந்நிலையில் கடந்த மே 29-ஆம் தேதி ஆா்.எஸ்.புரம் சிரியன் தேவாலய வீதியில் உள்ள சாக்கடைக் கால்வாயில் அபுதாஹிா் பாஷா உடல் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. அவரது உடலில் கத்திக் குத்து காயங்கள் இருந்தன.

இதுகுறித்து ஆா்.எஸ்.புரம் காவல் ஆய்வாளா் காமாட்சிநாதன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா். குற்றவாளிகளை விரைந்து பிடிக்க கோவை மாநகரக் காவல் துணை ஆணையா் தேவநாதன் தலைமையில் 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

போலீஸாா் கூறும்போது, ‘மனைவியைப் பிரிந்து வசித்து வந்த அபுதாஹிா் பாஷாவுக்கும், வேறு ஒரு பெண்ணுக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்த கொலை வழக்கு தொடா்பாக அபுதாஹிா் பாஷாவின் நண்பா்கள் மற்றும் இவரிடம் கடன் பெற்றவா்கள் என பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதில் அபுதாஹிா் பாஷாவின் நெருங்கிய நண்பரான ஒருவருக்கு இந்த கொலையில் தொடா்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். கொலையில் தொடா்புடைய அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவா்’ என்றனா்.