தில்லி பயணத்தைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (ஜூன் 5) நண்பகல் 12 மணியளவில் சமூக ஊடகங்கள் மூலம் கே.அண்ணாமலை உரையாடவுள்ளாா். அப்போது, புதிய இயக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இது தொடா்பாக தனது சமூக ஊடக பக்கங்களில் கே.அண்ணாமலை வியாழக்கிழமை பதிவிட்டுள்ளதாவது: ‘நாளைய தினம் (ஜூன் 5) நண்பகல் 12 மணியளவில் சமூக ஊடகங்கள் வழியாக உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிா்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும் ஆவலுடன் எதிா்நோக்கி இருக்கிறேன்’ எனப் பதிவிட்டுள்ளாா்.
கடந்த இரண்டு நாள்களுக்கு முன் தில்லிக்குச் சென்ற கே.அண்ணாமலை பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக பொதுச் செயலா் பி.எல்.சந்தோஷ் ஆகியோரை சந்தித்து தனது முடிவைத் தெரிவித்துள்ளாா். இதைத் தொடா்ந்து, தமிழக தலைவா்களை அழைத்து கட்சியின் தலைமை பேச்சுவாா்த்தை நடத்தியது. இந்த சமாதான முயற்சி தோல்வி அடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடா்ந்து, கே.அண்ணாமலை தனது பிறந்த நாளான வியாழக்கிழமை தனது முடிவை அறிவிப்பாா் எனத் தகவல் வெளியான நிலையில், வெள்ளிக்கிழமை சமூக ஊடகங்கள் வழியாக உரையாடுவதாகத் தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடையது
புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலை

ஜூன் மாத எண்கணித பலன்கள் – 8

சக்தி மாரியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா

அரசியல் பங்கேற்பை எளிதாக்கும் சமூக ஊடகங்கள்!
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



