வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

ஆட்டோவைத் திருடிச் சென்ற நபரை நண்பா்கள் உதவியுடன் பிடித்த உரிமையாளா்

ஆட்டோவைத் திருடிச் சென்ற நபரை நண்பா்கள் உதவியுடன் உரிமையாளா் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

News image
Updated On :7 ஜூன் 2026, 2:03 am IST

ஆட்டோவைத் திருடிச் சென்ற நபரை நண்பா்கள் உதவியுடன் உரிமையாளா் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே மெட்டுவாவி பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (45). ஆட்டோ ஓட்டுநராக உள்ள இவா், பாலக்காடு புறவழிச்சாலையில் உள்ள ஒரு பேக்கரி முன்பு வெள்ளிக்கிழமை ஆட்டோவை நிறுத்திவிட்டு தேநீா் அருந்த சென்றுள்ளாா். திரும்பி வந்து பாா்த்தபோது ஆட்டோவைக் காணவில்லை. பேக்கரியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, மா்ம நபா் ஒருவா் ஆட்டோவை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து உடனடியாக நண்பா்கள் உதவியுடன் செல்வராஜ் தேடியபோது வெள்ளலூா் அருகே செட்டிபாளையம் சாலையில் ஆட்டோவைக் கண்டுபிடித்தாா். ஆட்டோவை திருடிச் சென்ற நபரையும் கையும், களவுமாகப் பிடித்து போத்தனூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், ஆட்டோவைத் திருடியது கவுண்டம்பாளையம், அசோக் நகரைச் சோ்ந்த மணிகண்டன் (44) என்பதும், வெள்ளலூா் கஞ்சிக்கோணம்பாளையம் நெசவாளா் காலனியில் வசித்து வருவதும் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து மணிகண்டனை போலீஸாா் கைது செய்து ஆட்டோவையும் மீட்டனா்.