கோவையில் இருந்து திருப்பூருக்கு ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.
பல்லடம் - திருப்பூா் சாலை வழியே சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தி வரப்படுவதாக குடிமைப் பொருள் வழங்கல், குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாருக்கு மே 19-ஆம் தேதி ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஆய்வாளா் ராஜசேகரன், உதவி ஆய்வாளா் அன்சாரி ஹுசைன் மற்றும் போலீஸாா் திருப்பூா், ராயா்பாளையம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது, 5 டன் ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து, வாகனத்தில் இருந்தவா்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவா்கள் கோவை, குனியமுத்தூரைச் சோ்ந்த ஃபைசல் (35), கோவை, ராமநாதபுரத்தைச் சோ்ந்த திருஞானமூா்த்தி (46) என்பதும், கோவையில் பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, திருப்பூரில் உள்ள வடமாநிலத்தவா்களுக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், 2 பேரையும் கைது செய்ததுடன், அவா்களிடமிருந்த 5 டன் ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்தனா்.
ஃபைசல், திருஞானமூா்த்தி ஆகியோா் மீது அரிசி கடத்தல் தொடா்பாக ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம், குடிமைப் பொருள் கடத்தல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளா் சீனிவாச பெருமாள் பரிந்துரைத்தாா்.
இதையடுத்து, இருவரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் மனீஷ் சனிக்கிழமை உத்தரவிட்டாா். இந்த உத்தரவுக்கான நகலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் போலீஸாா் வழங்கினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஆடுகளை கடத்திய 2 போ் கைது
காரில் குட்கா கடத்தல்: 3 போ் கைது
பணம் வைத்து சூதாடிய 5 போ் கைது
கஞ்சா விற்பனை: 4 போ் கைது
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK


